தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நயன்தாரா, சூர்யாவுடன் 'மாஸ்', சிம்புவுடன் 'இது நம்ம ஆளு', ஜெயம் ரவியுடன் 'தனியொருவன்', உதயநிதி ஸ்டாலினுடன் 'நண்பேன்டா', ஆரியுடன் 'நைட் ஷோ' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 2015ம் ஆண்டிலும் நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
மலையாளத் திரையுலகில் 2003ம் ஆண்டு 'மனசினக்கரே' என்ற படம் நடிகையாக அறிமுகமானவர் 2005ல் வெளிவந்த 'ஐயா' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். காதல், பிரிவு என தனிப்பட்ட பிரச்சனைகளில் அவர் சிக்கினாலும் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். மலையாளத்தில் அவர் கடைசியாக நான்கு வருடங்களுக்கு முன்பு 'எலக்ட்ரா' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
தற்போது மீண்டும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் மம்முட்டி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதற்கு முன் இவர்களிருவரும் 'ராப்பகல், தஸ்கரவீரன்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை தமிழில் 'பிரண்ட்ஸ், காவலன்' உள்ளிட்ட படங்களையும் மலையாளத்தில் பல படங்களையும் இயக்கிய சித்திக் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் 'காவலன்' படத்தின் மலையாள படமான 'பாடிகார்ட் ' படத்தில் நயன்தாரா ஏற்கெனவே நடித்திருக்கிறார். புதிய படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 55 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
நயன்தாராவின் ரீ-என்ட்ரியை மலையாளத் திரையுலகம் ஆச்ச்ரியத்துடன் பார்க்கிறதாம்.