டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
45வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று(நவ 20ம் தேதி) துவங்கியது. விழாவை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரிகர், ரத்தோர் உள்ளிட்டோர்களும் பங்கேற்றனர். இன்று துவங்கும் விழா தொடர்ந்து நவ.,30ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. தமிழில் இருந்து குற்றம் கடிதல் எனும் ஒருபடம் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றுள்ளது.
விழாவின் துவக்க நிகழ்ச்சியாக நடிகை ஷோபனா, நடிகர் வினித் உள்ளிட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து கோவா திரைப்பட விழாவின் தேர்வுக்குழு உறுப்பினர்களான ஸ்லாமூர் இஜியாக், ஜியாங் ஜியான்யா, நதியா திரஸ்தி, மரியா பெர்னர், சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.