'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
""நடிகர் சங்கத்தையும், சங்க நிர்வாகிகளையும் அவதூறு பேசினால், நடிகர் விஷாலை, சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
திருச்சியில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் சங்கக் கடனை அடைப்பதில், விஜயகாந்த், ராதாரவி மற்றும் எனக்கும் (சரத்குமார்) பெரும் பங்கு உண்டு. அப்போது, இல்லாதவர்கள், தற்போது நடிகர் சங்க நிர்வாகிகளை குறை கூறுகின்றனர். தற்போது உள்ள, 3.50 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்து வருகிறோம்.
நடிகர் சங்க இடத்தில், சினிமா துறையில் அனுபவம் உள்ள சத்தியம் நிறுவனத்துக்கு கட்டிடம் கட்ட அனுமதியளித்தோம். 29 ஆண்டு, 11 மாதங்களுக்கு பின், நடிகர் சங்கத்தின் சொத்து மதிப்பு, 170 கோடி ரூபாயாக இருக்கும். பொதுக்குழுவில் அனுமதி பெற்றுத்தான், கட்டிடம் கட்ட அனுமதி அளித்தோம். நடிகர் சங்கத்தில் இருந்து, ஒரு பிடி மண்ணைக் கூட, யாரும் எடுத்து செல்ல முடியாது.
"விஸ்வரூபம் பட பிரச்னையில், நடிகர் சங்கம் உதவி செய்யவில்லை என, விஷால் கூறி வருகிறார். ஆனால், நான், ராதாரவி ஆகியோர், கமல் வீட்டில் இரவு, 1 மணி வரை இருந்து பிரச்னையை பேசினோம். பூச்சி முருகன் என்பவருக்கு பதவி தரவில்லை. அதனால், அவர், நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறி வருகிறார். நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.
அவருக்கு, விஷால் எடுத்து சொல்ல வேண்டும். விஷால், எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியில்லை. தொடர்ந்து, நடிகர் சங்கம் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பேசி வருகிறார். இதை, அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், விஷாலை, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.