தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் திரைப்பட கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் விஷால் பேசியதாவது: திருட்டு விசிடியை ஒழிக்க நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நான் கடைகளுக்கு, கேபிள் டி.வி அலுவலகங்களுக்கு சென்று பிடித்தது சட்டத்திற்கு உட்பட்டுத்தான். திருட்டு விசிடி விற்கப்படுவதை அறிந்தவுடன் முதலில் போலீசுக்கும் பிறகு பத்திரிகைகளுக்கும் தகவல் சொல்லிவிட்டுதான் சென்றேன். எல்லா இடத்திலும் போலீசார் முன்னிலையில்தான் நடந்தது. இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எந்த வகையிலும் நானே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட வில்லை.
நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் எனக்கு அந்த கடமையும், பொறுப்பும் இருக்கிறது. திருட்டு விசிடியை ஒழிக்க நடிகர்கள் தயாராக இருக்கிறோம். எல்லா நடிகர்களிடமும் நான் பேசியிருக்கிறேன். உங்களுக்கு துணையாக நடிகர்கள் இருப்பார்கள். அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு விஷால் பேசினார்.
நடிகர் பார்த்திபன் பேசும்போது, "திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். முன்பு நான் தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். இப்போது தெருவில் இறங்கி அடிக்கிறேன். போராட்டம்தான் மாறி இருக்கிறதே தவிர திருட்டு விசிடி ஒழியவில்லை. திரைப்படத்திற்கு முன்பு புகையிலை தடுப்பு விளம்பரம் திரையிடுவதை போல நடிகர் நடிகைள் திருட்ட விசிடி பார்க்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் படத்தை திரையிட வேண்டும்" என்றார்.