ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மானாட மயிலாட, நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் கீர்த்தி நட்சத்திர தொகுப்பாளினி, வெவ்வேறு விதமான இரண்டு நிகழ்ச்சிகளை திறமையாக தொகுத்து வழங்கும் கீர்த்திக்கு பல சீரியல் வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து விட்டார். தற்போது சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக தனது பெற்றோரிடமும் அனுமதி வாங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
"சின்னத்திரையில் நல்ல தொகுப்பாளினி என்று பெயர் வாங்கிவிட்டேன். அடுத்து சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். முதலில் வீட்டில் சம்மதிக்கவில்லை. இப்போதுதான் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு முக்கியமான நல்ல கேரக்டர்களில்தான் நடிப்பேன்" என்கிறார் கீர்த்தி.