டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் வடிவேலு காலகட்டம் மாறி சந்தானத்தின் காலம் வந்தது. இருவருமே ஹீரோவாகத்தான் நடிப்போம் என்ற முடிவெடுத்த பிறகு அடுத்த செட்டுகள் வந்தது. அதில் வேகமாக வளர்ந்து வருகிறார் பால சரவணன்.
இவரும் சின்னத்திரையில் இருந்து வந்த காமெடியன்தான். மதுரையைச் சேர்ந்த பால சரவணன் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பல குறும்படங்களிலும் நடித்தார். அதன் பிறகு ஈகோ என்ற படத்தின் மூலம் காமெடியன் ஆனார். குட்டிப்புலியும், பண்ணையாரும் பத்மினியும் அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் முழு நீள காமெடியன். தற்போது வெளிவந்திருக்கும் திருடன் போலீஸ் படத்திற்கு பிறகு பால சரவணனின் சம்பளமும், இமேஜும் உயர்ந்திருக்கிறது. மற்ற காமெடி நடிகர்கள் ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் டார்லிங், சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல், வலியவன், நகர்வலம், ஆ, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், வரைபடம் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் பால சரவணன்.