இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆழ்வார் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்தவர் ஸ்வேதா, மும்பை பொண்ணு. அதன் பிறகு சில படங்களில் தங்கை கேரக்டரில் நடித்தவர் வள்ளுவன் வாசுகி படத்தில் ஹீரோயின் ஆனார். இதயம் திரையரங்கம், கூட்டாஞ்சோறு, நான்தான் பாலா, பட்டைய கிளப்பணும் பாண்டியா படங்களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் அதிக சுதந்திரம் இருக்கிறது என்கிறார் ஸ்வேதா. அவர் மேலும் கூறியதாவது:
சினிமாவில் நமக்கு மேல் பெரிய சீனியர்கள் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பவ்யமாக இருக்க வேண்டும். சிலர் வந்தால் எழுந்து நின்ற மரியாதை தரவேண்டும். எதையும் பார்த்து பார்த்து செய்யணும். சின்னத்திரையில் அப்படியில்லை. சுதந்திரமாக இருக்கலாம். எல்லோருடனும் சகஜமாக பழகலாம்.
சினிமா மாதிரி கவர்ச்சியாக நடிக்க வேண்டியதில்லை. மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டியதில்லை. நமக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்து முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். இந்த காரணங்களால்தான் நான் சின்னத்திரையை தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் சினிமாவை விட்டு முழுமையாக விலகவில்லை. தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன். என்கிறார் ஸ்வேதா.