டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் கூட உச்ச நட்சத்திரம் என்றால் அவர் ஒருவர் மட்டுமே. ஒரு மாநில மொழித் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு நடிகருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு என்பது உலக அளவில் யாருக்கும் கிடைத்திருக்காத ஒன்று என்றே அவரைப் பற்றிச் சொல்பவர்கள் குறிப்பிடுவார்கள். கடந்த பல வருடங்களாகவே அவருடைய சம்பளம் எவ்வளவு என்று பலரும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆணிடம் சம்பளத்தையும், பெண்ணிடம் வயதையும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். ஆனால், நமக்கோ அதைத் திரும்பத் திரும்பக் கேட்பதிலோ தெரிந்து கொள்வதிலோதான் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
உச்ச நட்சத்திரம் நடித்து தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள கடவுளின் பெயர் கொண்ட படத்திற்காக அவருக்கு அறுபது கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பட்ஜெட்டே 150 கோடியாம், அதில் அவருடைய சம்பளம் மட்டும் 60 கோடி என்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் கிடையாது, அது படத்தின் வியாபாரத்திற்காக பேசப்படும் ஒரு பரபரப்பான விஷயம் என ஒரு சாரார் சொல்கிறார்கள். படத்தை வாங்கிய மும்பை நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல்தான் படத்தின் உரிமையை வாங்கியுள்ளது என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், இன்றைய ஹீரோக்களே சர்வசாதாரணமாக 30 கோடி ரூபாய் சம்பளம் என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, உலக அளவில் படத்தை வெளியிட்டு, அதற்கேற்ற வசூலையும் அள்ளித் தரும் ஒரு நடிகருக்கு அவர்களை விட இரு மடங்கு சம்பளம் இருந்தால் என்ன தவறு என்றும் கேட்கிறார்கள். தமிழ் சினிமாவில் இந்தப் படம் ஏற்படுத்தித் தர உள்ள வியாபாரம்தான் இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டு அதிகமாகப் பேசப்படும் திரைப்பட விஷயமாக இருக்கும் என திரையுலகத்தைச் சார்ந்தவர்களே கூறுகிறார்கள்.