டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது திவர் படத்தின் ப்ரீபுரோடெக்ஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வரும் அர்ஜூன் கபூர் தனியார் வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளாராம். அர்ஜூன் கபூரும், அவரது தாய்வழிப் பாட்டியான ஷட்டி சேரியும் இணைந்து இந்த கடனை வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார்களாம். இதற்காக அவர்கள் இருவரும் வங்கிக்கு நேரில் சென்று கடனுக்கான விண்ணப்பத்தையும் மற்ற பேப்பர்களையும் ஒப்படைத்ததாகவும், கடன் தொகை விரைவில் அப்ரூவல் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
அர்ஜூன் கபூர் விரைவில் தொழில் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், இதற்காக தனது சொத்துக்களை வைத்து இதில் முதலீடு செய்வதற்காக வங்கியில் கடன் பெற விண்ணப்பித்துள்ளாராம். இருப்பினும் கடன் வாங்குவதற்கான காரணத்தை வெளியிட அர்ஜூன் மறுத்து விட்டாராம். இது குறித்து அர்ஜூனின் உதவியாளர் கூறுகையில், இந்தியாவில் எல்லோரும் தான் வங்கியில் கடன் வாங்குகிறார்கள். அதில் அர்ஜூனின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.