சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
புனேயை சேர்ந்த சீத்தல் பவா என்ற 17 வயது இளம் பெண் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோயின் கடைசி கட்டத்தை எட்டிவிட்ட அவர் தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் வீட்டில் தன் கடைசி நாட்களை சந்தோஷத்துடன் கழித்து வருகிறார். அவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசனை சந்திக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதனை மேக் அவிஷ் என்ற அமைப்பு ஸ்ருதி ஹாசனுக்கு தெரியப்படுத்தியது.
ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி. மும்பையில் ஒரு இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத் தயாரிப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி வாங்கிக் கொண்டு புனே பறந்தார். அங்கு அவர் சீத்தல் பவாவை சந்தித்ததோடு அவருடன் ஒரு நாள் செலவிட்டார்.
அவருடன் சாப்பிடுவது, விளையாடுவது, பேசிக்கொண்டிருப்பது என்று பொழுதை கழித்தார். மரணத்தை தெரிந்து கொண்ட பிறகும் அதனை துணிச்சலுடனும், மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ளும் அந்த பெண்ணின் துணிச்சலை பார்த்து வியந்த ஸ்ருதி. அவரைப் புகழ்ந்து ஒரு கடிதம் எழுதி அவரிடமே கொடுத்து விட்டு திரும்பினார். அந்த கடிதத்தை தினமும் படித்தபடியே தன் இறுதி நாளை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறார் சீத்தல்பவா.