ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடித்த இந்தப் படம் தெலுங்கில் 'கரண்ட் டீகா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நேற்று வெளியானது. படத்திற்கு வெளியான முதல் நாளிலேயே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதே சமயம் விமர்சன ரீதியாகவும் படத்தில் சில பல குறைகள் இருக்கிறதென்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால், படத்தின் நாயகனான மஞ்சு மனோஜ் தமிழிலிருந்து தெலுங்கிற்கு வந்த இந்த படத்தை மீண்டும் தமிழிலேயே ரீமேக் செய்யலாம் என்றிருக்கிறார்.
அதாவது, தமிழிலிருந்து தெலுங்கிற்கு ஒரு படம் ரீமேக் செய்யப்படும் போது தெலுங்கு நேட்டிவிட்டிக்காக பல மாற்றங்களைச் செய்வார்கள். அவர்களுக்கு உரிய கலர் கலரான ஆடைகளுடன் வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் கதைக்குத் தேவையே இல்லாமல் கூட வரும். இவை மட்டுமில்லாமல் படத்தின் கதையிலேயே பல மாற்றங்களை தெலுங்கிற்கு ரீமேக்கான 'கரண்ட் டீகா' படத்தில் செய்திருக்கிறார்கள். அதனால், இந்த தெலுங்குப் படத்தை மீண்டும் கூட தமிழில் அதே தயாரிப்பாளர்கள் மீண்டும் கூட ரீமேக் செய்யலாம் என்று பேசியிருக்கிறார் மஞ்சு மனோஜ்.
படம் வெளிவந்து முழுதாக ஒரு நாள்தான் ஆகியிருக்கிறது. தமிழில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றி பலரையும் பிரமிக்க வைத்த வெற்றி. அப்படி இருக்க தெலுங்கில் ரீமேக் ஆகியிருக்கும் இந்தப் படம் தமிழை விட அங்கு பெரிய வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்குள் மனோஜ் பேசியிருப்பதைப் பார்த்தால் 'ஓவர் கான்ஃபிடன்ட்' ஆகவே இருக்கிறது.