கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பீட்சா படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா சில மாதங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இம்மாதம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ள தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்க உள்ளது. திரைப்பட விழாவின் ஐந்தாம் நாளான நவம்பர் 21ம் தேதி இப்படம் திரையிடப்பட உள்ளது.
இந்தத் திரைப்பட விழாவில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், நேபாள் ஆகிய நாடுகளில் தயாரான திரைப்படங்கள் கலந்து கொள்ள உள்ளன. அமெரிக்கா நாட்டில் தெற்காசியாவிலிருந்து வெளிவரும் திரைப்படங்களைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.
ஜிகர்தண்டா படத்துடன் ஹிந்தித் திரைப்படங்களான ஹேப்பி என்டிங், டிட்லி, எக்ஸ் ஆகிய படங்களும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளன. இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் இரண்டாவது தமிழ்ப் படம் ஜிகர்தண்டா. இதற்கு முன் 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஆரண்ய காண்டம் திரைப்படம் சிறந்த ஜுரி விருதை வென்றது. நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ்ப்படம் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளது.