வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
பூவா தலையா படத்துக்கு பிறகு காணாமல் போன துள்ளுவதோ இளமை ஷெரீன், தற்போது நண்பேன்டா படத்தில் நெகடீவ் ரோலில் நடித்திருக்கிறார். இதையடுத்து அவர் அதே ரூட்டை தொடரப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே அவரை கிளுகிளு நடிகையாகவே பார்த்து பழக்கப்பட்டு விட்ட ரசிகர்கள் அவரது வில்லி அவதாரத்தை ஏற்பார்களா? என்கிற சந்தேகம் இயக்குனர்களுக்கு உள்ளதாம்.
அதன் காரணமாகத் தான் அடுத்தபடியாக நடிப்பதற்கு சில டைரக்டர்களை சந்தித்து அவர் சான்ஸ் கேட்டபோது, அவரை கேரக்டர் நடிகை கோணத்தில் பார்க்காமல், ஏற்கனவே பீமா படத்தில் விக்ரமுடன் குத்தாட்டம் போட்டது மாதிரி அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட வேண்டியதானே என்று சொல்கிறார்களாம் டைரக்டர்கள்.
அதற்கு, ஒரு பாட்டுக்கு நடனமாடுவதை எல்லா நடிகைகளும் செய்து விடலாம். ஆனால், நெகடீவ் ரோல் எல்லோருக்குமே செட்டாகாது. எல்லோராலும் பண்ணவும் முடியாது. அதைதான் நான் இந்த படத்தில் செய்திருக்கிறேன். அதனால் நண்பேன்டா படம் வெளியாகும்போது எனது இமேஜே மாறும். அதோடு, என்னை நம்பி அதிரடியான வேடங்களை தரலாம் என்ற நம்பிக்கை இயக்குனர்களுக்கு ஏற்படும் என்று கூறும் ஷெரீன், அரண்மனை படத்தில் ஆண்ட்ரியா நடித்தது போன்று பேய் வேடங்களில் நடிப்பதிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாக அமானுஷ்ய படங்களை இயக்கும் டைரக்டர்களையும் சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார்.