தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்வேதா பாசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் அவரை 6 மாதங்கள் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்து கவுன்சிலிங்கும், கைத் தொழில் பயிற்சியும் கொடுக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்வேதா பாசு ஐதராபாத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ஸ்வேதாவை மகளிர் காப்பகத்தில் அடைத்து வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் என்று அவரது தாயார் கீழ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை கோர்ட் தள்ளுபடி செய்தது. அதனால் அவரது தாயார் செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த செசன்ஸ் கோர்ட் மகளிர் காப்பகத்திடம் கருத்து கேட்டது. ஸ்வேதா தற்போது நல்ல பக்குவம் அடைந்திருப்பதாகவும், அவரை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் காப்பகம் கூறியது. இதையடுத்து ஸ்வேதாவை விடுவிக்க அனுமதியளித்தது நீதிமன்றம்.
இதையடுத்து ஸ்வேதா விரைவில் காப்பகத்திலிருந்து வெளிவருவார் என்று தெரிகிறது. தன்னை விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோருடன் ஸ்வேதா வாழ விரும்பவில்லை என்றும், தனித்து வாழவே விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஸ்வேதாவுக்கு சினிமா வாய்ப்பு வழங்க பலர் முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.