தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அழகர் சாமியின் குதிரை, சகாக்கள், பாண்டியநாடு, சினேகாவின் காதலர்கள் ஆகிய படங்களில் நடித்தவர் அத்வைதா. இதையடுத்தும் சில படங்களில் நடித்து வரும் இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்தபடி திருப்புமுனை ஏற்படவில்லை. அதனால் அத்வைதா என்ற தனது பெயரை இப்போது கீர்த்தி ஷெட்டி என்று மாற்றி வைத்துக்கொண்டு சில டைரக்டர்களுக்கு தூது விட்டு வருகிறார்.
மேலும், தற்போது செவிலி, மாங்கா என சில படங்களில் நடித்து வருவதாக சொல்லும் கீர்த்தி ஷெட்டிக்கு தற்போது சினிமாவில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கும் என்கிற நம்பிக்கை போய் விட்டதாம். அதனால் ஏற்கனவே பரத நாட்டியம் முறைப்படி பயின்றிருப்பதால், தற்போது தனது சொந்த ஊரான பெங்களூரில் ஒரு பரத நாட்டிய பள்ளி தொடங்கியிருக்கிறாராம்.
இந்த பள்ளிக்கு நடனம் பயில வருபவர்களுக்கு தானே பயிற்சி கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி, சினிமாவுக்கு புதிதாக என்ட்ரி ஆகும் நடிகைகளையும் தொடர்பு கொண்டு பரத நாட்டியம் மட்டுமின்றி சினிமாவுக்கு தேவையான அனைத்து வகை நடனங்களையும் முறைப்படி பயிற்சி தருவதாகவும சொல்லி அழைத்து செல்கிறாராம். அதோடு, பெங்களூரில் நடக்கும் பள்ளி பெரிய அளவில் வளர்ந்துவிட்டால் அடுத்து அதன் கிளைகளை சென்னை, ஐதராபாத்தில் தொடங்கும் எதிர்கால திட்டமும் வைத்திருக்கிறாராம் கீர்த்தி ஷெட்டி.