ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் கீரவாணியும் ஒருவர். தமிழில், வானமே எல்லை, நீ பாதி நான் பாதி, அழகன் என சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி இவரது சித்தப்பா மகன் ஆவார். அதனால் ராஜமவுலியின் நான் ஈ உள்பட பல படங்களுக்கு கீரவாணிதான் இசையமைத்திருந்தார்.
மேலும், இப்போதும் பிசியான இசையமைப்பாளராக இருந்து வரும் கீரவாணி, 2016ம் ஆண்டோடு தான் இசையமைப்பதற்கு முழுக்குப் போடபபோவதாக அறிவித்தார். அதோடு, அதையடுத்து வேறு சில பணிகளில் தான் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், எனது இசைப்பயணத்தில் நிறைய முட்டாள்களை சந்தித்தேன். அவர்களை சமாளிப்பதுதான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது என்று கூறியிருந்தார். ஆனால் அவரது இந்த பேட்டி தெலுங்கு பட உலகில் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
அவருடன் பணியாற்றிய டைரக்டர்களும், பட அதிபர்களும், முட்டாள் என்று யாரை சொல்கிறீர்கள்? என்று கீரவாணிக்கு எதிராக கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதனால் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டியிருக்கும் கீரவாணி, தன்னைப் பார்த்து எழும் கேள்விகளுக்கு எந்த பதிலும சொல்ல முடியாமல் அமைதி காத்து வருகிறார்.