டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நயன்தாராவுக்கு, தற்போது ஆக் ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. 'ராணி ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும் நடிக்க விரும்புகிறேன் என்றும், சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார் நயன்தாரா.அதோடு, 'ஸ்ரீராமராஜ்ஜியம்' தெலுங்கு படத்தில் சீதை வேடத்திற்காக தான் நந்தி விருது பெற்றதை, அவர்களுக்கு நினைவுபடுத்தும் நயன்தாரா, சினிமாவுக்காக கடுமையாக உழைக்கவும், ரிஸ்க் எடுக்கவும், நான் தயாராகி விட்டேன் என்றும் கூறிவருகிறார். அதனால் கூடிய சீக்கிரமே, சரித்திர படங்களில் நடிப்பதில் அனுஷ்காவுக்கு போட்டி நடிகையாக, நயன்தாராவும் உருவெடுப்பார் என்று தெரிகிறது.