ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் அழகிய தம்பதிகளாக வாழ்ந்து வந்தவர்கள் ஹிருத்திக் ரோஷனும், சுசானேவும். யார் கண்பட்டதோ தெரியவில்லை, இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் சுசானே தனது பிறந்தநாளை தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் கொண்டாட கோவா சென்றார். அங்கு பிறந்தநாளையும், தீபாவளியையும் கொண்டாடினார் சுசானே. இதனிடையே ஹிருத்திக் ரோஷனும் கோவா வருவதாக இருந்தது. ஆனால் சுசானே, தனது சகோதரியுடன் கோவாவை விட்டு கிளம்பி மும்பை வந்தபிறகு தான் ஹிருத்திக் கோவா சென்றுள்ளார். பிறகு தனது குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்து பொழுதை கழித்தார். இதன்மூலம் ஒருவரை ஒருவர் புறக்கணித்தனர் ஹிருத்திக் மற்றும் சுசானே.