ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்தவர் சுபாஷ்கரன் அல்லிராஜா. இவர் லண்டனை தலைமையகமாகக் கொண்டு லைகா மொபைல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தொழில்ரீதியாக இவர் நெருக்கமானவர் என்பதினால்தான் லைகாபேனரில் கத்தி படம் தமிழ்நாடடில் வெளியாகக்கூடாது என்று பலத்த எதிர்ப்பு எழுந்தது.
அதையடுத்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தீபாவளிக்கு வெளியே வந்த கத்தி வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், நேற்று லைகா குழுவினர், மாலத்தீவில் இருந்து லண்டன் செல்ல திட்டமிட்டார்களாம். அதையடுத்து அவர்கள் விமானத்தில் பயணித்தபோது, அவர்களது விமானம் கொழும்பில் தரையிறங்கி லண்டன் புறப்பட தயார்நிலையில் நின்றதாம்.
அப்போது, சுபாஷ்காரன் அல்லிராஜாவின் பாஸ்போர்டுடன் விமானத்துக்குள் வந்த புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கீழே இறக்கி அழைத்து சென்றார்களாம். அதை அடுத்து சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டதாக இலங்கையில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரை எதற்காக கைது செய்தார்கள் என்பது பற்றிய தகவல்களை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டார்களாம்.