ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லண்டனில் உள்ள மேடம் டுசாட் மியூசியத்தில் உலக தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் மெழுகு சிலை வைக்கப்பட்டு வருகிறது. உலகின் பிரபலங்களை தேர்வு செய்ய ஒரு குழு செயல்படுகிறது. அந்த குழு பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிபாரிசு செய்பவர்களின் மெழுகு சிலை அங்கு வைக்கப்படும்.
இந்தி திரை நட்சத்திரங்களில் ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய், சல்மான்கான், ஆகியோருக்கு அங்கு சிலைகள் உள்ளன. இப்போது கத்ரினா கைப்புக்கு சிலை வைக்க அந்த மியூசியம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் மும்பை வந்த சிலை அமைப்பு நிபுணர்கள் கத்ரினாவை அளவெடுத்துச் சென்றுள்ளனர். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் சிலை தயாராகிவிடும். அதன் திறப்பு விழாவுக்கு கத்ரினா கைப் செல்ல இருக்கிறார்.
கத்ரினா கைப் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 2003ம் ஆண்டில் பூம் படத்தின் மூலம் அறிமுகமானார். காஷ்மீர் பெண்ணான கத்ரினா லண்டனில் பிறந்து வளர்ந்தவர். மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். அறிமுகமான சில படங்களிலேயே கமர்ஷியல் ஹீரோயினாக வளர்ந்தார். ஆரம்ப காலத்தில் தெலுங்கில் 2 படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார்.