இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்றல், உறவுகள் சங்கமம் தொடர்களில் நடித்து வந்த தேவி கிருபா, தற்போது முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முந்தைய சீரியல்களில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தேன். வயதை மீறிய தோற்றத்துடன் நடித்தேன். முந்தானை முடிச்சில் மார்டன் டிரஸ் அணியும் பெண்ணாக நடிப்பதால் சந்தோஷமாக இருக்கிறது. காரணம் நான் நிஜத்தில் மார்டன் உடைகளை விரும்பி அணிகிறவள்.
தொடர்களில் நடிப்பதோடு நிகழ்ச்சி தொகுப்பாளினி வாய்ப்புகளும் நிறைய வருகிறது. அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த பணியை செய்யலாம் என்று நினைக்கிறேன். நடிக்கும்போது தவறு செய்தால் ரீடேக் போகலாம். தொகுப்பாளினியாக அப்படி செய்யும் வாய்ப்பு குறைவு. அதனால் நன்றாக பயிற்சி எடுத்த பிறகு தொகுப்பாளினியாவேன். என்கிறார் தேவி கிருபா.