'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வந்த மகாபாரதம் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு மகாபாரத தொடர் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும், இந்த தொடருக்கு தனி வரவேற்பு இருந்தது. காரணம் இந்த தொடர் மகாபாரதத்தின் கிளை கதைகளுக்கு முக்கியத்தும் கொடுத்தது. ஒவ்வொரு கேரக்டர்களின் கதை, பின்னணி ஆகியவற்றை சொல்லி அதனை மகாபாரத கதையுடன் இணைத்தது.
இந்த பாணி மக்களை மிகவும் கவர்ந்தது. சத்யவதி-ஷாந்தனு கதையில் தொடங்கி மகாபாரத போருடன் நிறைவடைகிறது. கேரக்டர்களுகேற்ற நடிகர்கள் தேர்வு, அவர்களின் மிரட்டலான நடிப்பு, பிரமாண்ட அரங்குகள், பிரமிக்க வைக்கும் ஒப்பனை என மகாபாரத்தின் ஒவ்வொரு எபிசோடும் ஒரு திரைப்படத்துக்கு நிகராகவே அமைந்திருந்தது. இந்த தொடர் வருகிற 30ந் தேதியுடன் நிறைவடைகிறது.