'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1993ம் ஆண்டு சஞ்சய் தத் நடித்து சுபாஷ் காய் இயக்கத்தில் வெளியான கல்நாயக் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதற்காக படத்தின் உரிமையை பெறுவது தொடர்பாக சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் சுபாஷ் காய் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த வாரங்களுக்கு முன் செய்திகள் கசிந்தது. சுபாஷ் காயை அனுகிய சஞ்சய் லீலா பன்சாலி, தான் கல்நாயக் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறினாராம்.
ஆனால் சுபாஷோ, தனது படங்களை ரீமேக் செய்யும் உரிமையை, விருது பெற்ற சிறந்த இயக்குனர்களை தேர்வு செய்தே வழங்க நினைத்திருப்பதாகவும், அவ்வாறு தான் மதிக்கும் இயக்குனர்களில் சஞ்சய் லீலா பன்சாலியும் ஒருவர் என்றும் கூறி உள்ளார். அதேசமயம், தனது படங்களில் மிக முக்கியமானதாக கருதும் கல்நாயக் படத்தின் உரிமையை யாருக்கும் தரும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் கூறி மறுத்து விட்டாராம். இதனால் கல்நாயக் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை கைவிட்ட பன்சாலியும், தான் இயக்கி வரும் பஜிராவ் மஸ்தானி படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம்.மேலும் புதிய படங்கள் பற்றி சிந்திக்க தனக்கு தற்போது நேரம் இல்லை எனவும் அவர் தெரிவித்து விட்டாராம்.