‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்திப்பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ஸ்ரீதேவி, பின்னர் ஜானவி, குஷி என்ற இரண்டு மகள்களை பெற்றெடுத்து அவர்களை வளர்ப்பதற்காக தனது முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார். ஆனால், அவர்கள் 15 வயதை கடந்து விட்ட பிறகு மீண்டும் ஸ்ரீதேவியின் கவனம் சினிமா பக்கம் திரும்பியது.
பாலிவுட்டில் உள்ள பல டைரக்டர்களிடம் தனக்கு பொருத்தமான கதையை கேட்டு வந்த ஸ்ரீதேவிக்கு, கெளரி ஷிண்டே என்ற பெண் இயக்குனர் சொன்ன இங்கிலீஷ் விங்கிலீஷ் கதை பிடித்து விட அந்த படத்தில் லீடு ரோலில் நடித்தார். தமிழ், இந்தியில் உருவான அந்த படத்தில் அஜீத்தும் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார்.
அந்தவகையில், 18 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்த ஸ்ரீதேவியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் 2012ல் வெளியான அப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட்டனர். அங்குள்ள ரசிகர்களும் பலத்த வரவேற்பு கொடுத்ததால், தற்போது ருமேனியா மொழியிலும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை டப் செய்து வெளியிடப் போகிறார்களாம். இதனால் உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீதேவி, ஜப்பானில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தது போன்று, ருமேனியாவில் படம் வெளியாகும்போதும் அங்கு விசிட் அடித்து ரசிகர்களுக்கு நேரடி தரிசனம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.