தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையில் முதன் முறையாக திகில் சீரியல்களை கொண்டு வந்தவர் நாகா. அவர் இயக்கிய பல திகில் சீரியல்கள் மிகவும் பாப்புலர், மர்மதேசம், ருத்ரவீணா, சிதம்பர ரகசியம் போன்றவை அதில் முக்கியமானவை. அதன் பிறகு அனந்தபுரத்து வீடு என்ற காமெடி திகில் படத்தை இயக்கினார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு திகில் படத்துக்கான கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சீரியல் இயக்க வந்த பல வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் நாகா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அடுத்த சினிமாவுக்கான முன் தயாரிப்பில் இருக்கிறேன். மீண்டும் சீரியல் இயக்கும் எண்ணமே இல்லை. அதனால்தான் சில வாய்ப்புகளை தவிர்த்தேன். எப்போதும் சினிமா தொடர்பான வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது சீரியல்களை பார்ப்பதுகூட இல்லை. பல சீரியல்களின் கதை ஒன்றுபோல இருப்பதாக எங்கள் வீட்டு பெண்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். அந்த நிலை எனக்கும் வரக்கூடாதல்லவா அதுதான் சீரியல் பார்ப்பதில்லை. விரைவில் சினிமாவில் சந்திப்போம். என்கிறார் நாகா.