பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியாவில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க திரைப்பட விழா சென்னையில் துவங்கியது. புதுடில்லியில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதரகமும், சென்னை இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இதனை நடத்துகிறது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு தென் ஆப்பிரிக்க துணை தூதர் மொகலா துவக்கி வைத்தார். அவர் பேசும்போது "நான் இந்திய சினிமாவை நேசிக்கிறேன். ரசிக்கிறேன். இந்தியாவுடன் தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாச்சார உறவின் ஒரு பகுதியாக இந்த திரைப்பட விழாவை கருதுகிறேன். முதன் முறையாக இது நடத்துப் படுவது மகிழ்ச்சிக்குரியது" என்றார்.
விழாவில் இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேசன் பொதுச் செயலாளர் தங்கராஜ், தலைவர் சிவன் கண்ணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், வருமானவரித்துறை இயக்குர் டி.என்.கர், தென் ஆப்ரிக்க தூதரக செயலாளர் நிகோலோ பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடிகை ஷைலஜா குத்துவிளக்கேற்றினார்.