தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
என் வாழ்க்கை துணைக்கான நபரை விரைவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளா நடிகை பிரணீதி சோப்ரா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை பிரணீதி சோப்ரா. தற்போது ஷாத் அலி இயக்கத்தில், ''கில் தில்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரணீதியுடன் ரன்வீர் சிங், அலி ஜாபர், கோவிந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் காதல்-கீதல் என்று எதுவும் இல்லாமல் தனித்து இருக்கும் பிரணீதி, விரைவில் தன் வாழ்க்கை துணையை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, என் மனதுக்கு பிடித்தவரை இதுவரை நான் சந்திக்கவில்லை, நீண்டகாலமாக அவரை தேடி வருகிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று நினைக்கிறேன். தற்போது நான் தனியாக இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது, ஆனாலும் விரைவில் என்னவரை சந்திப்பேன் என்றார். மேலும் கில் தில் படத்தில், போலியான வாழ்க்கையையும், பணக்கார பெண்ணாகவும் நடிக்கிறேன். இருந்தாலும் இப்படத்தில் என்னை பார்ப்பவர்கள் பக்கத்துவீட்டு பெண் போன்று பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.