அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கே.வி.ஆனந்த் கனா கண்டேன் படம் மூலம் இயக்குனரானார். அதையடுத்து விஜய் மில்டன் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. வேல்ராஜ் வேலையில்லா பட்டதாரி என கோலிவுட்டின் பல ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர் ஆனதைத் தொடர்ந்து இப்போது கனகராஜ் என்ற இன்னொரு ஒளிப்பதிவாளரும் இயக்குனர் அவதாரமெடுக்கிறார். தமிழில், மறுமுகம், வழி விடு கண்ணே வழிவிடு, இன்னொருவன் உள்பட பல படங்களிலும், மலையாளத்தில் க்ரைம் ஸ்டோரி மற்றும் 4 தெலுங்கு படங்களிலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.
மேலும், தான் இயக்கும் முதல் படத்திற்கு கூலிப்படை என்று பெயர் வைத்திருப்பதாக சொல்லும் கனகராஜ், கன்னடத்தில் ஏகே -53 உள்பட 6 ஆக்சன் படங்களில் நடித்துள்ள சித்தார்த் மற்றும் வருண்ராஜ் என்ற இரண்டு நடிகர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும், அவர்களுடன் ஆடுகளம் நரேன், தம்பி ராமைய்யா, இளவரசு உள்பட பல கமர்சியல் நடிகர் நடிகைகளும் நடிப்பதாக கூறுகிறார். அதோடு இனியா, ஓவியா இருவரில் ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
அவரிடத்தில் திடீரென்று இயக்குனர் பிரவேசம் ஏன்? என்று கேட்டால், இது திடீரென்று எடுத்த முடிவல்ல. நான் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரும்போதே இயக்குனர் கோர்ஸ் படிக்கத்தான் வந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒளிப்பதிவாளர் கோர்ஸில் சேர்ந்து விட்டேன். இருப்பினும் இயக்குனர் ஆசையே எனக்குள் இருந்ததால், கே.பாக்யராஜின் சுந்தர காண்டம் படத்தில் உதவி கேமராமேனாக பணியாற்றியபோதே, பாக்யராஜிடம் ஸ்க்ரீன் பிளே என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.
அதோடு இந்த படத்திற்கு நானே கதை எழுதவில்லை. ஆர்ட் டைரக்டர் சரவணன் என்பவர் சொன்ன கதை பிடித்திருந்ததால் அதைத்தான் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறேன். இது வெறும் கமர்சியல் படமல்ல. கூலிப்படைகளை வேறருக்கும் ஒரு அதிரடியான கதை. ஒரு டாக்டர் தவறு செய்தால் நோயாளி பாதிக்கப்படுவார், ஒரு வக்கீல் தவறு செய்தால் வழக்குகள் முடங்கும், ஆனால் போலீஸ் தவறு செய்தால் ஊரே பாதிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் இந்த படத்தின் கதை தயாராகியுள்ளது என்று கூறும் கேமராமேன் கனகராஜ், இந்த படம் கண்டிப்பாக இன்றைய சமுதாயத்துக்கு தேவையான ஒரு நல்ல படமாக இருக்கும் என்கிறார்.