600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தான் சினிமாவில் பிசியாக இருந்த காலத்தில் மாதம் ஒரு முறை ரசிகர்களை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்தார் ரஜினி. ஆனால் பின்னர் அப்படி சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இருப்பினும், அவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தபோது தமிழகமெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவர் பூரண குணமடைய பல பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தினர்.
இந்த சேதியை அறிந்து நெகிழ்ந்து போனார் ரஜினி. அதனால் தான் குணமடைந்து வீடு திரும்பியதும் ரசிகர்களை சந்திப்பதாக சொன்னார். அதையடுத்து சென்னையில் உள்ள ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் அன்பாக உரையாடிய ரஜினி, சில அட்வைஸ்களையும் வழங்கினார். அதன்பிறகு சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை.
இந்த நிலையில், தீபாவளி தினத்தன்று ரஜினியை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் வெளியூர்களில் இருந்து சென்னை வந்து குவிந்து விட்டார்களாம். இதையடுத்து தனது வீட்டருகே ஒரு மேடையில் தோன்றினாராம். அப்போது ரசிகர்கள் தீபாவளி வாழ்த்து சொல்ல, ரஜினியும் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்னாராம். சிறிது நேரம் அவர்களுடன் அன்பாக பேசி விட்டு பின்னர் விடைபெற்று சென்றாராம்.
மேலும், 2011ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து உரையாடிய ரஜினி, இந்த வருடம் தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ரசிகர்களை மீண்டும் சந்திக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.