ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளிக்கு முந்தின நாள் வரை விஜய் நடித்துள்ள கத்தி படம் திரைக்கு வருமா? வராதா? என்பதே பெருத்த கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் ஒருவழியாக எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லைகா பெயரை நீக்கி கத்தியை வெளியிட்டுள்ளனர். திரையிட்ட எல்லா சென்டர்களிலும் ரசிகர் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, விஜய் நடித்த படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படம் என்ற பெயரும் ரசிகர்களின் கருத்தாகி விட்டதால், எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் கத்தி ஓடும் என்கிற கருத்துக்களும் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாக்ஸ் ஆபீசில் கத்தியின் வசூல் கன்னாபின்னாவென்று எகிறிக்கொண்டிருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுபற்றி அப்பட டைரக்டர் முருகதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
தீபாவளி அன்று வெளியான கத்தி படம் உலகம் முழுவதிலும் ஒரே நாளில் 23 கோடியே 80 லட்சத்தை வசூலித்ததாக தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 16 கோடியே 45 லட்சமும், வெளிநாடுகளில் 7 கோடியே 35 லட்சமும் வசூலானதாகவும் கூறுகிறார். அநத வகையில், தென்னிந்திய அளவில் இதுவரை எந்த படங்களும் இந்த அளவுக்கு முதல்நாளில் வசூலித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை தமிழில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த பட பட்டியலில் ரஜினியின் எந்திரன்தான் முதலிடத்தில் இருந்தது. அதையடுத்து, அஜீத்தின் ஆரம்பம் இடம்பிடித்திருந்தது. ஆனால் இப்போது அந்த இரண்டு படங்களையும் பின்தள்ளிவிட்டு முதலிடத்துக்கு சென்றிருக்கிறது விஜய்யின் கத்தி.