பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்பட பல படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இந்த படங்களில் அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்ட போதும், இனனும் மார்க்கெட்டில் அவர் பேசப்படும் நடிகையாகவில்லை. இருப்பினும் தற்போது சமுத்திரகனி இயக்கத்தில் நடிக்கும் கிட்னா படம் தன்ஷிகாவை பேசவைக்கும் படமாக அமைந்திருக்கிறது.
காரணம், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் தயாராகிறது. இதில் தமிழ், மலையாளத்தில் டைரக்டர் சமுத்திரகனியே ஹீரோவாக நடிக்க, தெலுங்கு, கன்னடத்தில் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். ஆனால், இந்த 4 மொழிகளிலும் கதாநாயகியாக தன்ஷிகாதான் நடிக்கிறாராம். அதனால் ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடிக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் இப்படத்தில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார் தன்ஷிகா.
மேலும், இந்த படத்தில் ஒரே கதையை ரசிகர்களுக்கு ஒரு விதமாகவும், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப இன்னொரு விதமாகவும் எடுக்கப்போகிறாராம் சமுத்திரகனி. அதோடு, இரண்டு மாதிரியான படத்தையும் தியேட்டர்களுக்கும் வெளியிடுகிறாராம். அதாவது, ரசிகர்களுக்காக எடுக்கும் படத்தை 100 தியேட்டர்களிலும், விருதுக்காக எடுக்கப்படும் படத்தை 50 தியேட்டர்களிலும் பிரித்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம் சமுத்திரகனி.