மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தடைகளைத் தாண்டி, தீபாவளியன்று வெளியான விஜய்யின் கத்தி திரைப்படம், மற்றும் விஷாலின் பூஜை படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளி ரிலீசாக வெளியாகியுள்ள இந்த இரண்டு படங்களுக்கும் இதுவரை நல்ல வசூல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கத்தி முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் சொல்லப்பட்டது.
அதைப்போல விஷாலின் பூஜை முதல் நாளிலேயே 4 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.
இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே கத்தி படம் வசூலில் சாதனை படைக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் கத்தி படத்தின் இயக்குநரான ஏ.ஆர்முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வசூல் விவரத்தை தெரிவித்திருக்கிறார்....
இதுவரை வெளிவந்த மற்ற எல்லா தென்னிந்திய படங்களை விடவும் முதல் நாளில் கத்தி அதிக வசூல் செய்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு, கர்நாடகா, வட இந்தியா ஆகிய இடங்களில் 16.45 கோடிகளையும், வெளிநாடுகளில் 7.35 கோடிகளையும் மொத்தம் 23.80 கோடிகளையும் வசூலித்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.