இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அப்பாவின் மறைவை திரைபிரபலங்கள் யாரும் கண்டுகொள்ளாதது மனதிற்கு வருத்தம் அளிப்பதாக ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் ஆகாஷ் கூறியுள்ளார். ஒரு காலத்தில் தன் ஒளிப்பதிவால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அசோக்குமார்(70). இயக்குனர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள், ஜீன்ஸ் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் அசோக்குமார். அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் இயக்கியுள்ளார்.
கடந்த 6 மாத காலமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், தீபாவளி தினத்தன்று(அக்., 22ம் தேதி) அவர் மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது இறுதிசடங்கில் ஒருசில திரைபிரபலங்களை தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து மனவருத்தப்பட்டு இருக்கிறார் அசோக்குமாரின் மகன் ஆகாஷ்.
அவர் கூறியுள்ளதாவது, அப்பா புகழின் உச்சத்தில் இருந்தபோது அவரை காண இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் வருவார்கள், ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகிய பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடைசியில் அவர் இறந்தபோது அவரை காண பெரும்பாலபான திரைநட்சத்திரங்கள் யாரும் வரவில்லை, ஒருசிலர் மட்டுமே வந்தனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நாம் எல்லோரும் எந்த மாதிரியான உலகத்தில் இருக்கிறோம் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.