டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹேப்பி நியூ இயர் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இதற்காக படத்தின் ஹீரோ ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கடந்த ஒருமாத காலமாக படத்தின் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தனர். இந்த படத்தை நடிகர் ஷாருக்கான் ரொம்பவே எதிர்பார்க்கிறார். இந்த படத்தை உருவாக்குவதற்காக அவரும், ஹேப்பி நியூ இயர் படக்குழுவினரும் எவ்வளவு சிரமப்பட்டனர் என்பது தொடர்பாக ஷாருக்கான் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது :
சர்வதேச நடன போட்டி பற்றிய படம்
டான்ஸ் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அதில் ஆர்வமுள்ள 6 பேர் பற்றிய கதை தான் ஹேப்பி நியூ இயர். அவர்கள் சர்வதேச நடன போட்டி ஒன்றில் கலந்து கொள்கிறார்கள். அந்த போட்டிக்காக நல்ல அர்த்தமுள்ள பாடல்களை தேர்வு செய்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். கமர்ஷியல் படங்களில் இது முக்கிய இடத்தை பிடிக்கும். இதுவரை கேட்டிராத வகையில் ஒவ்வொரு பாடலும் மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இது டான்ஸ் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் விஷால்-ஷேகர் ஆகியோர் தங்களின் பணியை சிறப்பாக செய்திருப்பதால் அனைத்துப் பாடல்களும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
படத்திற்காக மிகவும் சிரமப்பட்டேன்
ஹேப்பி நியூ இயர் படத்தை தயாரித்த விஷயமே சிரமமானது தான். அசோகா, ரா ஒன் படங்களும் கஷ்டமானவைகள் தான். ஆனால் அவற்றை விட ஹேப்பி நியூ இயர் படத்திற்கு ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளேன். நான் விஷூவல் எபைக்ட் கம்பெனி வைத்துள்ளதால் இதனை என்னால் தயாரிக்க முடிந்தது. இந்த படத்தை எனக்காக தயாரிக்கவில்லை. ரசிகர்களுக்காக தான் தயாரித்தேன். ஹேப்பி நியூ இயர் படத்தை பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தர வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள்
நான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூட், விவான் ஷா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே ஹேப்பி நியூ இயரின் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நான் சார்லி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். அவன் தான் இந்த குழுவின் மாஸ்டர் மைண்ட். தீபிகா, மோகினி ஜோஷி என்ற பார் டான்சர் கேரக்டரில் நடித்துள்ளார். அபிஷேக் தபோரி என்ற ரோலில் நடித்துள்ளார். இப்படி அனைத்து நடிகர்களும் வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளோம்.
பராக்கானின் தன்னம்பிக்கை பாராட்டக்கூடியது
சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பராக் கானுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். பராக் கானிடம் நான் கற்றுக் கொண்டது அவரின் தன்னம்பிக்கை தான். இது சரியா வருமா, வராதா என நான் செய்யாமல் இருந்தேன். இந்த படத்தை இயக்கி ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அளிக்கும் தன்னம்பிக்கை இல்லாமல் தான் இருந்தேன். உண்மையாக சிந்தித்து பார்த்தால் பாலிவுட் திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. இதற்கு இது போன்றதொரு புத்திசாலித்தனம் தேவை என தோன்றியது. பராக்கிடம் அந்த ஆற்றல் உள்ளது. ஆணாதிக்க துறையில் ஒரு பெண் இயக்குநரை மதிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது எனக்கு தெரியும்.
தீபிகா எப்போதுமே ஸ்டார்
தீபிகாவின் வெற்றிக்கு நான் ஏதும் செய்யவில்லை. அவரது வளர்ச்சிக்கும், புகழுக்கும் அவர் தான் காரணம். உங்களின் வெற்றிக்கான பாராட்டை மற்றவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது. தீபிகா எப்போதுமே ஒரு ஸ்டார் என்று தான் நான் நினைக்கிறேன். ஓம் சாந்தி ஓம் படத்தில் புதிதாக நடிக்க வந்த போது எந்த அளவிற்கு அவரது நடிக்கும் ஆர்வம் இருந்ததோ அதே ஆர்வமும் கொஞ்சமும் குறையாமல் இப்போதும் உள்ளது. உண்மையாகவே அவர் கடினமாக உழைக்கக் கூடியவர். பாலிவுட்டின் ஒரு அற்புதமான நடிகை.
வரவேற்பை பெற்ற வசனங்கள்
ஹேப்பி நியூ இயர் படத்தின் வசனங்ஙகளுக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஆதரவு நிஜமாகவே எனக்கு சந்தோஷத்தை தந்துள்ளது. இந்த படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தவைகள்.
இவ்வாறு ஷாரூக்கான் கூறியுள்ளார்.