ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் பொல்லாதவன், குத்து, கிரி படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்தின் முன்னணி நடிகை. கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் உறவினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். 6 மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ரம்யா அரசியலுக்கு வந்ததும். அவர் மாண்டியா தொகுதியில் ஆதிக்கம் செலுத்துவதும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை. தன்னை தனது கட்சிக்காரர்களே தோற்கடித்து விட்டதாக ரம்யா குற்றம் சாட்டினார். மாண்டியா தொகுதியிலேயே தங்கியிருந்து மக்கள் பணியாற்றி அந்த மக்களின் அபிமானத்தை பெற்று அடுத்த தேர்தலில் அங்கு வெற்றி பெறுவேன் என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ரம்யாவுக்கு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. ரம்யா மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். சிவராஜ்குமாருடன் ஆர்யன் படத்தில் நடித்தார். இந்த படம் முடிந்து விட்டநிலையில் அடுத்த படத்துக்கான வேலையாக லண்டன் செல்வதாக கூறிச்சென்ற ரம்யா இதுவரை நாடு திரும்பவில்லை. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட் இணைய தளங்களில் பரபரப்பாக இயங்கும் ரம்யா கடந்த சில வாரங்களாக எதையும் அப்டேட் செய்யவில்லை.
இதனால் அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து அவர் லண்டனிலேயே குடியேறிவிட்டதாக நேற்று பெங்களூர் முழுவதும் பரபரப்பு கிளம்பியது. ரம்யாவை அழைத்து வந்து உண்மையை கூற வேண்டும். அவன் தன் நிலை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். மிரட்டியவர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசியல்கட்சி பிரமுகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.