பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெலுங்கில் பல வெற்றிகரமான அதிரடி ஆக்ஷன் படங்களை உருவாக்கிய குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ருத்ரமாதேவி'. இந்தியாவில் உருவாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி சரித்திரப் படம் என்ற பெருமையுடன் இப்படம் தயாராகி வருகிறது. சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 13ம் நூற்றாண்டில் டெக்கான் பகுதியில் கக்காத்திய வம்சத்தில் ஆட்சி புரிந்த ராணி ருத்ரமாதேவியின் வரலாற்றைச் சொல்லும் படம்தான் இந்த ருத்ரமாதேவி.
அந்தக் கதாபாத்திரத்தில் அனுஷ்காவின் பொருத்தமான தோற்றத்தைக் கண்ட புகைப்படத்தை முதன் முதலாகப் பார்த்த போதே அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இப்படம் கண்டிப்பாக தெலுங்குத் திரையுலகில் ஒரு முக்கியப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு படம் ஆரம்பமான நாளிலிருந்தே இருந்து வருகிறது. டிசம்பர் மாதத்திலோ அல்லது பொங்கல் சமயத்திலோ படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வந்தன. ஆனால், இறுதிக் கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தற்போது படத்தின் வெளியீட்டை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஆனால், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு முன்பாக வெளியிட்டால் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்க முடியும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார்களாம். அதனால், பட வெளியீடு ஏப்ரல் மாதம்தான் இருக்கும் என்கிறார்கள்.