மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்தியத் திரையுலகின் முக்கியமான முன்னணி கமர்ஷியல் மற்றும் பிரம்மாண்டமான இயக்குனர்களாகப் பார்க்கப்படுபவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் தமிழ்த் திரையுலகின் இயக்குனரான ஷங்கர், மற்றொருவர் தெலுங்குத் திரையுலகின் இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி. ஷங்கர் தற்போது 'ஐ' என்கிற பிரம்மாண்டமான படைப்பை எடுத்து முடித்திருக்கிறார். அடுத்த மாதம் இப்படம் வெளியாக உள்ளது. ராஜமௌலி 'பாகுபலி' என்ற சரித்திரக் காவியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களிருவரின் படங்களிலுமே பிரம்மாண்டம், கிராபிக்ஸ் காட்சிகள், கதைக் களம், கதாபாத்திரங்களை கையாளும் முறை, நட்சத்திரங்களின் தேர்வு என பல விஷயங்கள் கமர்ஷியலான சூப்பர் ஹிட்டுகளைக் கொடுக்கும் விதத்தில் இருக்கும்.
தமிழ்ப் படமான 'ஐ' படத்தை உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாது, சீனா, ஐரோப்பாவில் உள்ள சில மொழிகள், மற்றும் சினிமாவை அதிகம் நேசிக்கும் நாடுகளில் பேசப்படும் மொழிகள் என பல மொழிகளில் சுமார் 20000 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக 'ஐ' படத்தின் தயாரிப்பாளர் சொல்லி வருகிறார்.
இயக்குனர் ராஜமௌலியும் அவருடைய 'பாகுபலி' படத்தை 'ஐ' படத்திற்கும் மேலாக அதிக தியேட்டர்களிலும், நாடுகளிலும் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளாராம். சரித்திரக் கதை என்பதாலும் உருவாக்கத்தில் உலகத் தரத்துடன் இருப்பதாலும் தன்னுடைய படம் 'ஐ'க்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என அவரும் நிரூபிக்க முயல்வார் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம். எப்படியிருந்தாலும் ஹிந்திப் படங்களுக்குப் போட்டியாக இனி தென்னிந்தியப் படங்களும் உலக அளவில் போட்டி போடும் படங்களாக உயர்வதற்கு இந்த இரண்டு இயக்குனர்களும் தற்போது காரணமாக அமைந்துள்ளார்கள் என்பதே இரு மொழித் திரையுலகினரும் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு விஷயமாக அமைந்துள்ளது.