Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திருமணத்தில் ஏமாற்றமடைந்து நடிப்பால் ஆறுதல் பெற்ற நடிகைகள்

24 அக், 2014 - 13:41 IST
எழுத்தின் அளவு:

போராட்டமயமான தங்களின் கடந்த கால வாழ்க்கையில் இருந்து துணிச்சலாக வெளியே வந்து, நடிப்பால் ஆறுதல் பெற்ற நடிகைகள் பலர் பாலிவுட்டில் உள்ளனர். சொந்த வாழ்க்கையில், குறிப்பாக திருமண வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்த நடிகைகள் பலர், இன்றும் நடிப்பில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்களில் சிலரை பற்றி இங்கே பார்க்கலாம்....

மல்லிகா ஷெராவத் : பஞ்சாபி பெண்ணான இவர், துணிச்சலான பல வேடங்களில் நடித்தாலும் கவர்ச்சி ரோல்களே இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது. மல்லிகாவின் சொந்த பெயர் ரீமா லம்பா. இருப்பினும் பாலிவுட்டிற்குள் நுழைவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக, அரசி என்ற அர்த்தம் தருவதால் தனது பெயரை மல்லிகா என மாற்றிக் கொண்டுள்ளார். விமான பணிப்பெண்ணாக இருந்த மல்லிகா, விமானியான கரன் சிங் கில் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் மல்லிகாவிற்கு நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருந்துள்ளது. ஆனால் இது அவரது வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மல்லிகா, மாடலிங் துறையில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்தார். பின்னர் 2003ம் ஆண்டு க்வாஹிஷ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்து, ஹிமான்சு மாலிக் என்ற நடிகருடன் 17 முத்தக் காட்சிகளில் நடித்து ஒரே படத்தில் பலராலும் பேசப்படும் நடிகையானார்.


சித்ரங்கதா சிங் : சுதிர் மிஸ்ராவின் ஹசாரோன் குவைஷ்னி ஆய்ஷி படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்ரங்கதா சிங். இவருக்கு ஜோதி ரன்தவா என்ற கோல்ஃப் வீரருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜோராவர் என்ற மகனும் உள்ளான். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி டில்லிக்கு சென்ற இவர், பின்னர் மும்பைக்கு வந்து நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது திருமண வாழ்க்கையில், கணவனால் பல துன்பங்களை அனுபவித்தன் விளைவாக வீட்டில் இருந்து வெளியேனாராம். இவரது திருமண வாழ்க்கை பல சிக்கல்களை கொண்டதாக இருந்ததாக மீடியாக்கள் பலவும் கூறுகின்றன. ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்னை ஏற்பட்டது, எதுனால் பிரிந்தார்கள் என்பது பற்றி சித்ரங்கதாவோ, ரன்தவாவோ இதுவரை வாய்திறக்காமல் உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் இவர்களிடையே முறைப்படி விவாகரத்து பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


அதிதி ராவ் ஹைதரி : ஏ ஷாலி ஜிந்தகி படத்தின் மூலம் இவரை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் சுதிர் மிஸ்ரா. அதிதி, தனது 21 வயது வயதில் அரசு அதிகாரியாக இருந்து நடிகரான சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், மிக குறுகிய காலமே இவர்களின் திருமண வாழ்க்கை நீடித்தது. தனது கடந்த கால வாழ்க்கை பற்றி வெகு காலமாக வாய் திறக்காமல் இருந்த அதிதி, கடந்த ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக வெளிப்படையாக தெரிவித்திருத்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், எனது 17வது வயதில் அவரை சந்தித்தேன். எனக்கு ஏற்பட்ட சீரியசான உறவு அது மட்டும் தான். நாங்கள் பிரிந்த போது அது என் மனதை மிகவும் பாதித்து விட்டது. ஆனால் எங்களுக்குள் இருந்த உறவு மட்டுமே முறிந்துள்ளது. நாங்கள் இப்பவும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவரது அம்மாவிற்கு நான் மகளாக உள்ளேன். அதே போல் எனது அம்மாவின் மனதில் அவர் ஒரு மகனாக உள்ளார். அவர் என்னை விட பல வயது மூத்தவர். அதனால் குழந்தையை காரணம் காட்டி எப்போதும் என்னை துன்புறுத்தி வந்தார் என்றார்.


நர்கீஸ் ஃபக்ரி : குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் புகழின் உச்சிக்கு சென்றுள்ள நர்கீஸ் ஃபக்ரி, நியூயார்க்கில் பிறந்தவர். திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆவதை விட வாழ்க்கையில் ஏதாவது மாதிக்க வேண்டும் என்பதையே நர்கீஸ் அதிகம் விரும்பினாராம். இதனால் தனது வீட்டையும், கணவரையும் பிரிந்து 8 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தார். பாதி பாகிஸ்தானி நடிகையாகவும், பாதி செக் குடியரசு நடிகையாகவும் இருந்த இவர் சல்மான் கானின் கிக் படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைனார். வீட்டில் இருந்து வெளியேறி பற்றி தனக்கு எந்த வருத்தமும் கிடையாது எனவும் நர்கீஸ் தெரிவித்துள்ளார்.


மஹி கில் : தேவ் டி, மஹி ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மஹி கில், பல போராட்டங்களுக்கு பின் நடிகையாக உருவெடுத்தவர். தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு பல ஆண்டுகளாக மனஅழுத்தத்தில் இருந்த மஹி, சண்டிகரில் இருந்து மும்பைக்கு வந்து பல காலம் முயற்சித்து பின் நடிகையானார். 2009ம் ஆண்டே இவர் நடித்த முதல் படம் வெளியே வந்து பலராலும் பேசப்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் மஹி, தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி குறித்து வெளிப்படையாக கூறினார். அதில், எனக்கு திருமண நடைபெற்ற போது நான் மிகவும் சின்ன பொண்ணு. அப்போது எனக்கு எந்த விபரமும் தெரியாது. தற்போது பக்குவம் அடைந்து விட்டேன். எனது முன்னாள் கணவருடன் எனது நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதும் நான் அவரை மதிக்கிறேன். நாங்கள் மெசேஜ்களை பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அவருடனான திருமண உறவை தொடர நான் விரும்வில்லை. எதிர்காலத்தில் மீண்டும் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in