தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராம்லீலா படத்திற்கு பிறகு, சஞ்சய் லீலா பன்சாலி, மீண்டும் ரன்வீர் சிங்கை வைத்து ''பஜிராவ் மஸ்தானி'' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தப்படத்திற்காக ரன்வீர் சிங் குர்கானுக்கு குடிபெயர இருக்கிறார். இதுப்பற்றி விசாரித்ததில், சமீபத்தில் அவர் இந்தப்படத்திற்காக மொட்டை அடித்து இருப்பது போன்ற தோற்றம் வெளியாகின. இதனால் இப்படத்தில் ரன்வீர் சிங் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரன்வீர் சிங்கின் தோற்றம் வெளியானதால் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனால் இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்கவும், படம்பற்றிய விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்கவும் குர்கானில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பை தனியாக வாடகைக்கு பிடித்துள்ளார் இயக்குநர். இனி ரன்வீர் சிங் தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே படம் முடியும் வரை இருப்பார் என படக்குழு தெரிவிக்கிறது.