ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இலியானா மார்க்கெட் எகிறி நிற்பதால், படத்துக்குப் படம் தன் படக்கூலியை உயர்த்தி வருவதாக, அவரைப்பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால்,இந்த செய்தியை அதிரடியாக மறுத்துள்ளார் இலியானா. 'நான் ஒன்றும் பணத்தின் அருமை தெரியாதவள் அல்ல. சின்ன பெண்ணாக இருந்தபோது, மும்பையில் வாடகை வீட்டில் தான் வசித்தேன்.அதன்பின், கோவா சென்று கஷ்டப்பட்டு, ஒரு வீடு கட்டினார் என் தந்தை. கொத்தனாருக்கு கூட பணம் கொடுக்க முடியாமல், நாங்களே மண் சுமந்து, அந்த வீட்டின் பூச்சு வேலைகளை செய்தோம். அப்போதெல்லாம், நான் மண் தரையில் தான் துாங்குவேன்.இப்படி கஷ்டப்பட்டு வளர்ந்த எனக்கு, தயாரிப்பாளரின் கஷ்டங்களைஉணர முடியும். அதனால், எந்த பட தயாரிப்பாளர்களையும், நான் கஷ்டப்படுத்துவதில்லை' என்கிறார்.