இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிவகார்த்திகேயன் நடித்து வரும் காக்கிச்சட்டை படம் தீபவாவளிக்கு ரிலீஸ் ஆகியிருந்தால் கூட இத்தனை சந்தோஷப்பட்டிருப்பாரா என்று தெரியாது. ஆனால் படு விமரிசையாக இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வருட தீபாவளி சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக அமைந்துவிட்டது. அதாவது, அவருடைய செல்ல மகள் ஆராதனாவுக்கு அக்டோபர் 22 தீபாவளி அன்றுதான் முதல் பிறந்தநாள்.
ஆகவே இந்த வருட தீபாவளியை டூ இன் ஒன்னாக அதாவது இரண்டு விழாக்களையும் சேர்த்து வைத்துக் கொண்டாடி உள்ளது சிவகார்த்திகேயனின் குடும்பம். காலையில் தீபாவளி கொண்டாட்டம், மாலையில் ஆராதனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என திருச்சியில் இருக்கும் தனது அம்மா, அக்கா குடும்பங்களுடன் தீபாவளியை கொண்டாடினாராம் சிவகார்த்திகேயன்.
அவர் பற்றி மற்றொரு தகவல்...காக்கிச்சட்டை படத்தில் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். நிஜத்தில் சிவகார்த்திகேயனின் அப்பா திருச்சியில் போலீஸ் எஸ்.பி.யாக இருந்து காலமானவர். எனவேதான் காக்கிச்சட்டை படத்தில் போலீஸ்அதிகாரி வேடத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.