இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு நடிக்கப்போனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஹேமமாலினி, ஸ்ரீதேவி, அசின், தமன்னா, இலியானா இப்படி நிறைய இருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி தமிழ் நாட்டிலிருந்து பாலிவுட் சேனல்களுக்கு செல்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பாவனா அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கணவருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். இனி டி.வி.தொகுப்பாளினி வேலை வேண்டாம். நிகழ்ச்சி தொகுப்பாளராகலாம் என்று முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் இறங்கினார். மும்பையில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்தது. காரணம் அவரது உயரமும், மும்பை பெண் போன்ற தோற்றமும்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் அணியோட தொகுப்பாளினியாக மாறியது பாவனாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. கிரிக்கெட் கேப்டன் டோனிக்கு பிடித்த தொகுப்பாளினி ஆனார். அவருடன் 13 மேடை நிகழ்ச்சி பண்ணியிருக்கார். அடுத்து சென்னை எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஷாருக்கான் மனதிலும் இடம்பிடித்தார். இந்த முறை ஹேப்பி நியூ ஈயர் புரமோசனுக்காக வந்த ஷாருக்கான் பாவானாவையே தொகுப்பாளினியாக போடச் சொன்னாராம்.
இப்படி பாலிவுட் ஸ்டார்களின் அபிமான வட்டத்துக்குள் வந்து விட்டார் பாவனா, ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைப், ஷாருக்கான் என நிறைய நண்பர்கள் அவருக்கு. இப்போது மும்பை நிகழ்ச்சிகளுக்கும் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாவனாவின் தெளிவான ஆங்கில மற்றும் இந்தி உச்சரிப்பும் அதற்கு காரணம். விரைவில் இந்தி சேனல் ஒன்றில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.