திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர்சல்மான், ''தமிழில் வாயை மூடி பேசவும்'' என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் தோல்வியடைந்து விட்டபோதும இப்போது மணிரத்னம் இயக்கி வரும் ஓகே கண்மணி(அதிகாரப்பூர்வ தலைப்பு அல்ல) படத்தில் நடிக்கிறார். அதையடுத்து, இன்னொரு மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் அடுத்து இயக்கும் ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
இப்படி இளவட்ட மலையாள நடிகர்களெல்லாம் தமிழ்ப்படங்களில் நடிப்பதால், மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசிலுக்கும் இப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் அவரது மனைவியான நஸ்ரியா தனக்கு தெரிந்த சில தமிழ் டைரக்டர்களை சந்தித்து கணவருக்காக படவேட்டையும் தொடர்ந்திருக்கிறாராம்.
அதோடு, படத்தில் பஹத் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்ற எந்த சட்டமும் இல்லை. இரண்டு மூன்று ஹீரோ கதைகள் என்றாலும் நடிப்பார். ஆனால் விஜய் சேதுபதி நடித்து வருவது போன்று கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரி வேடமாக கொடுங்கள் என்று தனது நிலையை விளக்குகிறாராம் நஸ்ரியா. அதனால் மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ், துல்கர்சல்மான, காளிதாசைத் தொடர்ந்து பஹத்பாசிலும் விரைவில் தமிழ் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.