ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தன்னுடன் எந்த நடிகை நடித்தாலும் அவர்களுடன் உயிர்த்தோழராகி விடுவார் ஜெயம்ரவி என்கிறார்கள். அதிலும் நயன்தாராதான் அவரது நீண்டகால கனவு கன்னி. அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு இப்போது தனி ஒருவன் படத்தில் அந்தவாய்ப்பு கிடைத்திருப்பதால் செம குஷியில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதைப்பற்றி ஜெயம்ரவியைக் கேட்டால், நயன்தாரா நல்ல நடிகை. அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன். மற்றபடி அவருடன் குஷியுடன் நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. காரணம், அவர் நல்ல பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட். அதனால் அவருடன் போட்டி போட்டுத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
மற்றபடி நான் என்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுடனும் உயிர்த்தோழராகி விடுவேன் என்று சொல்வதும் தவறு. என்னைப்பொறுத்தவரை எல்லோரிடமும் இயல்பாக பழகுவேன். மற்றபடி அந்தந்த படங்களில நடித்து முடித்தும் அவர்கள் யாரோ நான் யாரோ என்றாகி விடுவோம். ஆனால் ஜெனிலியா மட்டும்தான் எனது பெஸ்ட் ப்ரண்ட்.
அவருடன் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் நடித்தபோது நல்ல தோழியாகி விட்டார். இப்போதும் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். அந்த வகையில் எனது குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமைக்குரிய நடிகை ஜெனிலியா என்கிறார் ஜெயம்ரவி.