பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை த்ரிஷா செல்ல பிராணிகள் வளர்ப்பதிலும், அதிலும் குறிப்பாக தெரு நாய்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். செல்ல நாய்களுக்காக அவர் தீபாவளிக்கு பட்டாசுகூட வெடிப்பதில்லையாம். அவர் கூறியிருப்பதாவது: பொதுவாகவே தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது எனக்கு பிடிக்காது. அதுக்கு காரணம் பட்டாசால் காற்று மாசும், ஒலி மாசும் உண்டாகும். அதோடு என் செல்ல நாய்குட்டிகள் பட்டாசுக்கு பயப்படும். மனிதர்களை விட நாய்களுக்கு செவித் திறன் அதிகம். பட்டாசு சத்தம் நம்மை விட பல மடங்கு சத்தமாக நாய்களுக்கு கேட்கும். பண்டிகை என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
தீபாவளியன்று வீட்டுக்குள்ளேதான் இருப்பேன். செல்ல நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். மாலையில் பட்டாசு சத்தம் குறைந்ததும் தோழிகள் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவேன். என்கிறார் த்ரிஷா.