ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமா டைரக்டர்களில் பாலா-மிஷ்கின் இருவருமே வெவ்வேறு கருத்து உடையவர்கள். அதோடு தங்களது படைப்பில் யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள். அப்படிப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது பிசாசு படத்தில் இணைந்திருப்பது டோட்டல் கோலிவுட்டையே வியக்க வைத்திருக்கிறது.
அதிலும், பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தை இயக்குகிறார். அதனால் பாலாவிடம் கதை சொல்லச்சென்றபோது, அவரும் ஒரு டைரக்டர் என்பதால் ஒன்லைனை சொல்லிவிட்டு, திரைக்கதை இந்த மாதிரி இதை நோக்கி செல்லும் என்று சில விசயங்களை மட்டும்தான் சொன்னாராம் மிஷ்கின். அதிலிலேயே பாலாவுக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டு விட்டதாம். அதனால்தான் நானே தயாரிக்கிறேன் என்று சொன்னாராம்.
ஆக, தற்போது பிசாசு படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார் மிஷ்கின். இந்த நிலையில், ஒருநாள்கூட படப்பிடிப்பு நடைபெற்ற ஸ்பாட்டுக்கு செல்லவில்லையாம் பாலா. அதனால் கண்டிப்பாக க்ளைமாக்ஸ் படமாக்கும்போது நீங்கள் வர வேண்டும் என்று அவருக்கு அன்புக்கட்டளை போட்டாராம் மிஷ்கின். அதன்பிறகே ஒருநாள் ஸ்பாட்டுக்கு சென்று மிஷ்கினை படப்பிடிப்பு நடத்தியதை வேடிக்கைப்பார்த்தாராம் பாலா.
அதையடுத்து, நீங்கள் வேலை வாங்கும் விதம் சிறப்பாக உள்ளது. அதனால் படமும் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்று மிஷ்கினிடம் கூறி விட்டு விடைபெற்றாராம் பாலா. ஆக, பாலாவின் நம்பிக்கையை காப்பாறறி விட வேண்டும் என்பதற்காக இப்போது இன்னும் கூடுதலாக உழைத்துக்கொண்டிருக்கிறார் மிஷ்கின்.