ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிகரம் தொடு படத்தில் வில்லனாக அறிமுகமானவர் விநாயக் ராஜ். தற்போது இடம்பொருள் ஏவல் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: சொந்த ஊர் பானவயல், சின்ன வயசிலிருந்தே நடிப்புன்னா வெறி அதுக்காக ஊரைவிட்டு ஓடிவந்து கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கி வாய்ப்பு தேடவில்லை. நடிப்பை முறைப்படி படிக்கணுன்னு நினைச்சேன். புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்ல முறைப்படி நடிப்பு படிச்சு டிகிரி வாங்கினேன்.
அதற்கு பிறகு நடிக்க வந்தேன். சிகரம்தொடுவில் வில்லனா நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு காட்சிக்காக 6 மணி நேரம் தலைகீழா கட்டி தொங்கவிட்டாங்க. கண்ணுலேருந்து ரத்தம் வந்தது பொறுத்துகிட்டு நடிச்சேன். அதுக்காகத்தான் இப்போ பலன் கிடைச்சிருக்கு.
இடம் பொருள் ஏவல்ல நடிக்கிறேன். சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படத்துலேயும் நடிக்கிறேன். கவுரவ் இயக்கும் அடுத்த படத்துலேயும் நடிக்கிறேன். கமல் சாரின் உதவியாளர், சீனிவாசன், பேரரசு, ஆகியோரின் படங்களில் நடிக்கிறேன். ரகுவரன், பிரகாஷ்ரா-ஜ் மாதிரி வில்லனாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் ஜெயிக்கணுங்றது£ன் என்னோட ஆசை. என்கிறார் விநாயக்ராஜ்.