தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், அப்படிப்பட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். பல போர்னோகிராபிக் படங்களிலும், சில ஆங்கிலப் படங்களிலும், ஹிந்திப் படங்களிலும் நடித்தவர் சன்னி லியோன். சில மாதங்களுக்கு முன் வெளிவந்த வட கறி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடினார். அந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சுமார் 50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.
தற்போது தெலுங்கில் கரண்ட் டீகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. தமிழில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ரீமேக்தான் கரண்ட் டீகா. தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் கதாபாத்திரத்தில் தெலுங்கில் சன்னி லியோன் நடித்துள்ளார். படத்தில் சிறிது நேரம் மட்டுமே வரும் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சன்னிக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியதாக அந்தப் படத்தின் நாயகன் மஞ்சு மனோஜ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களுக்கே 1 கோடி வரைதான் சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சன்னி லியோனுக்கு முன்னணி ஹீரோயின்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது மற்ற ஹீரோயின்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அது மட்டுமல்ல, சன்னி லியோன் நடித்துள்ள ஒரு பாடல் காட்சிக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்து அந்தப் பாடல் காட்சியை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்களாம். கரண்ட் டீகா படத்திற்கு இப்போதே நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது. கடந்த வாரமே படம் வெளியாக வேண்டியது, ஆனால், ஹுட் ஹுட் புயலால் படத்தின் வெளியீடு அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.