தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடல் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி வரும் படம் புதிய படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், நித்யாமேனன் ஜோடி சேர்ந்துள்ளனர். வில்லன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய இருவர், கன்னத்தில முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்தார் பிரகாஷ்ராஜ்.
மேலும், தமிழ், மலையாளம் என தயாராகும் இப்படத்தை மிகக்குறைந்த பட்ஜெட்டில் இயக்குகிறாராம் மணிரத்னம். அதோடு, ஏராளமான காதல் கதைகளை இயக்கியிருக்கும அவர், இந்த படத்தை ஏற்கனவே கார்த்திக்-மோகன், ரேவதியைக்கொண்டு தான் இயக்கிய மெளனராகம் பாணியில் இன்னொரு புதுமையான காதல் கதையில் இயக்கி வருகிறாராம்.
அதனால்தான் இந்த படத்திலும் துல்கர்சல்மான், பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் என்ற மூன்று கேரக்டர்களும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாம். மேலும், இந்த படத்திற்கான டைட்டீல் பற்றி இன்னமும் மணிரத்னம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடாதபோதும், ஓகே கண்மணி என்று அவர் டைட்டீல் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த டைட்டீலை கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் இடமபெற்ற, ''போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி...'' என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.