சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களே எந்தவித தயக்கமும் இன்றி அயிட்டம் பாடல்களில் நடனமாடுவார்கள். ஆனால் அனுஷ்கா சர்மா மட்டும் இதுவரை பல வாய்ப்புகள் தேடிச்சென்றபோதும் அதை ஏற்கவில்லை. காரணம், அயிட்டம் பாடல் என்கிறபோது அதிக ஆடைகுறைப்பு செய்யச்சொல்வார்கள் என்பதால் அந்த வாய்ப்புகளை கட்டாயமாக தவிர்த்து வந்தார்.
ஆனால், இப்போது ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா நடிக்கும் தில் தடக்னே டு என்ற படத்தில் முதன்முறையாக ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். காரணம், இந்த படத்தை இயக்குவது ஜோயா அக்தர் என்ற பெண் இயக்குனராம். அவரது படங்களில் ஆபாசத்துக்கு எப்போதுமே தடைதானாம். அதனால்தான் தன்னை அளவுக்கதிகமாக தோலுரிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நடித்தாராம் அனுஷ்கா சர்மா.
அவரது நம்பிக்கையை வீணடிக்காத வகையில், ஜோயா அக்தரும் அவரை பக்கா டீசன்டாகவே உடையணிய வைத்து ஆட வைத்திருக்கிறாராம். மேலும், அதே பாடலில் படத்தின் ஹீரோ ரன்வீர்சிங், ஹீரோயின் பிரியங்கா சோப்ரா ஆகியோரும்கூட அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்களாம். இந்த வாய்ப்பினை பெருமையாக கருதும் அனுஷ்கா சர்மா, இந்த தில் தடக்னே டு என திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படமாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.